பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக ஹேரத்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக ஹேரத்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் நட்சத்திரமான ரங்கன ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவானான ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணியுடன் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடரில் இருந்து, தனது ஆலோசனைப் பணிகளை ஆரம்பிக்கவிருக்கின்றார்.

இதேநேரம், ரங்கன ஹேரத் இந்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற T20 உலகக் கிண்ணம் வரையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக செயற்படுவார் என, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்குப் பொறுப்பாக இருக்கும் அக்ரம் கான் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்ற ரங்கன ஹேரத், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ரங்கன ஹேரத்தின் நியமனம் தவிர பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவின் அஷ்வெல் பிரின்ஸினை தமது துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started